ஆற்காட்டில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


ஆற்காட்டில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

ஆற்காட்டில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காட்டில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 50), கூலி தொழிலாளி. இவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது சமையலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி கமலாராணி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story