ஹரிஹரபுத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது


ஹரிஹரபுத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது
x

ஹரிஹரபுத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

திருச்சி

கல்லக்குடி:

கும்பாபிஷேகம்

லால்குடி வட்டம், புஞ்சைசங்கேந்தி கிராமத்தில் உள்ள பூரண புஷ்பகலா சமேத ஹரிஹர புத்திர சுவாமி(அய்யனார்), தைலாயி, லெட்சுமாயி சமேத துரைசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில் புனரமைக்கப்பட்டு நாளை(வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை அனுஞ்கை, விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், தனபூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலையில் ரக்ஷாபந்தனம், தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று காலை பல்வேறு பூஜைகளும், அதைத்தொடர்ந்து முதல் கால யாகபூஜையும், மாலையில் 2-ம் கால யாகசாைல பூஜையும் நடைபெற்றது. இன்று(புதன்கிழமை) மாலை 5.30 மணியளவில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4 மணியளவில் நான்காம் கால யாக பூஜையும், அதைத்தொடர்ந்து தீபாராதனையுடன் கடம் புறப்பாடும் செய்யப்பட்டு, காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் பரிவார தெய்வங்களின் விமான கலசத்திற்கும், 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் பூரண, புஷ்பகலா சமேத ஹரிஹரபுத்திர சாமி, தைலாயி, லெட்சுமாயி சமேத துரைசாமி கோவில் கோபுர விமான கலசங்களுக்கும், தொடர்ந்து 8.30 மணி அளவில் மூலவருக்கும் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. சிவஸ்ரீ பிச்சை சிவாச்சாரியார், சிவஸ்ரீ மதுசூதன சிவாச்சாரியார் மற்றும் சிவகாமரத்தினம் சிவஸ்ரீ ஜெயக்குமார் சிவாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேகம் செய்கின்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

கஜமோட்சம்

கும்பாபிஷேக விழாவையொட்டி யானை, குதிரைகள் வரவழைக்கப்பட்டு கஜமோட்சம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் புள்ளம்பாடி, குமுளூர், ந.சங்கேந்தி, இ.வெள்ளனூர், புதூர் உத்தமனூர், கல்லக்குடி உள்ளிட்ட சுமார் 25 கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கிராமத்தின் எல்லைகளில் பந்தல் அமைத்து நீர்ேமார் வழங்கி வருகின்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், சங்கேந்தி ஆண்டவர் அறக்கட்டளை நிர்வாகிகள், இளைஞர்கள், கிராம மற்றும் உள்ளூர், வெளியூர் கோவில் குடிபாட்டுமக்கள் செய்து வருகின்றனர். ஊராட்சி சார்பில் கிராமம் முழுவதும் தூய்மை காவலர்களை கொண்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story