மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு


மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு
x

திருவாடானை அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் இறந்தார்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா மங்கலகுடி அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர் சம்பவ தினத்தன்று புலியூர் கிராமத்தில் உள்ள தனது மனைவியின் அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள புளிய மரத்தில் ஏறி புளியம்பழம் உலுப்பிக் கொண்டிருந்தாராம். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கஸ்தூரி (48) அளித்த புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன், உயிரிழந்த சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

1 More update

Related Tags :
Next Story