தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு


தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 2 Jun 2023 6:45 PM GMT (Updated: 2 Jun 2023 6:46 PM GMT)

தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள கொங்கம்பட்டி கிராமத்தில் சாலை ஓரத்தில் கழிவுநீர் குட்டையும், செப்டிக் டேங்க் கழிவுகளும் சேர்ந்து குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் இங்கு உள்ளதால் அப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளது. இதை தடுக்ககோரி சாலை ஓரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், கழிவுநீர் தேங்காத வண்ணம் சுத்தம் செய்துதர கோரிக்கை விடுத்தும் இளையான்குடி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதார துறை ஆகியோரிடம் தொடர்ந்து புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ெபாதுமக்கள் கூறினர். இதுகுறித்து கலெக்டரிடமும் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் கலெக்டரிடம் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.


Next Story