சென்னையில் கனமழை: குளுமையில் மகிழ்ச்சியுடன் தூங்கிய மக்கள்


சென்னையில் கனமழை: குளுமையில் மகிழ்ச்சியுடன் தூங்கிய மக்கள்
x

சென்னையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. தொடர் கன மழை காரணமாக மக்கள் குளுமையில் மகிழ்ச்சியுடன் இரவில் தூங்கினர்.

சென்னை

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. எனினும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடு இல்லை.

இந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் இருந்து சென்னை சென்டிரல், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், பெரம்பூர், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பெரும்பான்மையான இடங்களில் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. சில இடங்களில் சூறைக்காற்றும் வீசியது.

இதேபோன்று, சென்னையின் புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் கன மழை காரணமாக சென்னை வாழ் மக்கள் நேற்று குளுமையை உணர்ந்ததுடன் மகிழ்ச்சியுடன் இரவில் தூங்கினர்.


Next Story