கொடைரோட்டில் பலத்த மழை
கொடைேராட்டில் பலத்த மழை பெய்தது. அதில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது.
திண்டுக்கல்
கொடைரோடு, அம்மையநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 3.45 மணி முதல் 4.15 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழையுடன் வீசிய பலத்த காற்றால் கொடைரோடு-உச்சனம்பட்டி செல்லும் சாலையில் அம்மாபட்டியில் ஒரு மின்சார கம்பம் திடீரென்று சாய்ந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். உடனே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சீரமைப்பு பணி மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மின்வினியோகம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story