பந்தலூர் பகுதியில் பலத்த மழை


பந்தலூர் பகுதியில் பலத்த மழை
x

பந்தலூர் பகுதியில் பலத்த மழை

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காலை முதல் மதியம் வரை வெயிலும், பின்னர் மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. அதன்படி நேற்றும் பந்தலூர், எருமாடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக எருமாடு கிராம நிர்வாக அலுவலகம் அருகே மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதேபோல் உப்பட்டி, பாட்டவயல், பிதிர்காடு, நெலாக்கோட்டை, சேரம்பாடி, கரியசோலை உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

1 More update

Next Story