திசையன்விளை பகுதியில் பலத்த மழை


திசையன்விளை பகுதியில் பலத்த மழை
x

திசையன்விளை பகுதியில் பலத்த மழை பெய்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இடையன்குடி, இடைச்சிவிளை, நாடார் அச்சம்பாடு, ஆனைகுடி, முதுமொத்தன்மொழி மன்னார்புரம், மகாதேவன்குளம் பகுதிகளில் நேற்று மாலை 5-15 மணி முதல் 6.30 மணிவரை இடைவிடாது பலத்த மழை பெய்தது. இதனால் திசையன்விளை பஜார் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று பெய்த மழையால் குளிர்சியான சூழ்நிலை நிலவியது.


Next Story