திருவண்ணாமலையில் பலத்த மழை

திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இதனால் சாலையில் அனல் காற்று வீசியதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் அவதிப்பட்டனர். இரவு 7 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இந்த மழை 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. பின்னர் இரவில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையினால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இதேபோல கீழ்பென்னாத்தூர் பகுதியிலும் 45 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





