இடி-மின்னலுடன் பலத்தமழை


இடி-மின்னலுடன் பலத்தமழை
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:46 PM GMT)

மேல்மலையனூர் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்தமழை

விழுப்புரம்

மேல்மலையனூர்

மேல்மலையனூரில் நேற்று பிற்பகல் 2 மணியிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 3 மணிக்கு லேசான சாரலுடன் மழை பெய்ய தொடங்கியது. 5 மணியிலிருந்து இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளம் தாழ்வான பகுதியில் தேங்கியது. இடி-மின்னல் காரணமாக மின்சாரம் தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமாவாசை விழாவுக்காக வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் வளத்தி, வேட்டைக்காரன்பட்டி, முருகன்தாங்கல், சிறுதலைப்பூண்டி, கொடுக்கன்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.


Related Tags :
Next Story