மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம்,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின்அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் இன்று காலையிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று காலை நிலவரப்படி ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

பழைய குற்றால அருவிக்கும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க எவ்வித தடையும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story