5-வது நாளாக கடும் பனிப்பொழிவு


5-வது நாளாக கடும் பனிப்பொழிவு
x

நன்னிலம் பகுதியில் 5-வது நாளாக தொடர்ந்த கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

திருவாரூர்

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடரும் கடும் பனிப்பொழிவு காரணமாக காலை 9 மணி வரை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக நன்னிலம் வழியாக இயக்கப்பட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளையும் பின்புற விளக்குகளையும் எரியவிட்டபடி சென்றன. நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை பனிப்பொழிவு குறையாமல் இருப்பதால் நடைப்பயிற்சி செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.


Next Story