வளர் பருவ கோழிகளுக்கு தீவனத்தில் இரும்பு சத்தை பயன்படுத்த வேண்டும்ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்


வளர் பருவ கோழிகளுக்கு தீவனத்தில் இரும்பு சத்தை பயன்படுத்த வேண்டும்ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

வளர் பருவ கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் இரும்பு சத்தை உபயோகிக்க வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இன்று, நாளை (ஞாயிற்றுக்கிழமை) மணிக்கு 4 கி.மீட்டர் வேகத்திலும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும். இன்று கிழக்கு திசையில் இருந்தும், நாளை முதல் 4 நாட்களுக்கு வடகிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.

வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 66.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 50, 50, 40, 40, 40 சதவீதமாகவும் இருக்கும்.

மழைக்கு வாய்ப்பில்லை

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. கடந்த வாரம் இறந்த கோழிகள் ரத்த சோகை நோயால் இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே பண்ணையாளர்கள் வளர் பருவ கோழிகளுக்கு அளிக்கும் தீவனத்தில் இரும்பு சத்து, பி.எம்.டி. ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மேலும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என பரிசோதித்து அதற்கேற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story