பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு


பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2022 2:50 AM GMT (Updated: 24 Oct 2022 2:54 AM GMT)

தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு,

தீபாவளி பண்டிகை இன்று (திங்கள்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்பும் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு ஏதுவாக நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பா் 19-ஆம் தேதி பணி நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story