புனித அன்னம்மாள் ஆலய தேர் பவனி

கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
கூடங்குளம்:
கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
புனித அன்னம்மாள் ஆலயம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியன நடந்தது. 8-ந் திருநாளில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் வந்தனர். அவர்கள் கடலில் புனிதநீராடி அன்னையை தரிசித்தனர்.
தேர் பவனி
9-ந் திருநாளில் தேர் பவனி நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அன்னம்மாள் எழுந்தருளினார். பின்னர் இந்த தேர் பவனியானது ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் சென்று அதிகாலை 3 மணி அளவில் ஆலயத்தை மீண்டும் வந்தடைந்தது. தேர் பவனியில் ஏராளமானவர்கள் உடன் சென்றனர். 10-ந் திருநாளான நேற்று மதியம் அசன விருந்து நடைபெற்றது. பின்னர் இரவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கூடங்குளம் சபையின் அருட்தந்தை அந்தோணி ஜெபஸ்டின் ரூபன் மற்றும் புனித அன்னம்மாள் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.






