வீடு புகுந்து 2 செல்போன்கள் திருட்டு


வீடு புகுந்து 2 செல்போன்கள் திருட்டு
x

வீடு புகுந்து 2 செல்போன்கள் திருட்டு போனது.

ஈரோடு

ஈரோடு வீரப்பன்சத்திரம் பாண்டியன் வீதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 67). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை சாத்திவிட்டு தூங்கியுள்ளார்.இந்த நிலையில் நேற்று காலை எழுந்துபார்த்தபோது வீட்டில் இருந்த 2 செல்போன்களை காணவில்லை. அதை இரவில் வீடு புகுந்து மர்மநபர் யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து இதுபற்றி குமார் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story