இல்லம் தேடி வரி வசூல் பணி


இல்லம் தேடி வரி வசூல் பணி
x
தினத்தந்தி 19 March 2023 12:15 AM IST (Updated: 19 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இல்லம் தேடி வரி வசூல் பணி

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை பொதுமக்கள், வியாபாரிகள் உடனடியாக வழங்க வேண்டும் என்று நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தினமும் வாகனத்தில் சென்று ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் புதிய முயற்சியாக நகராட்சி அதிகாரிகளை தனித்தனி குழுவாக பிரித்து கைகளில் ஒலிபெருக்கிகளை கொடுத்து வரி பாக்கி உள்ள வீடுகள், கடைகள் முன்பு நின்று அறிவிப்பு செய்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த முயற்சியை பொதுமக்களும் வரவேற்று வரி பாக்கிகளை செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வால்பாறை நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இல்லம் தேடி மருத்துவ திட்டம் போன்று இல்லம் தேடி வரி வசூல் பணியை செய்து வருகிறோம். இதை பார்த்தாவது பொதுமக்கள் சமுதாய அக்கறையோடு வரி பாக்கிளை செலுத்த முன்வர வேண்டும் என்றனர்.

1 More update

Next Story