கவுரவ விரிவுரையாளர்கள் மனித சங்கிலி போராட்டம்


கவுரவ விரிவுரையாளர்கள் மனித சங்கிலி போராட்டம்
x

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10-வது நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம். யு.ஜி.சி. சம்பளம் ரூ.50 ஆயிரம், பணி பாதுகாப்பு மற்றும் யு.ஜி.சி. தகுதி பெற கால அவகாசம் வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் ராஜீவ்காந்தி, சரவணன், தட்சிணாமூர்த்தி, லெனின், வஜ்ஜிரவேல், அறிவழகன், அருணா, சுகன்யா, அருள்ஜோதி, ராதிகா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story