குளித்தலையில் குதிரை-மாட்டுவண்டி பந்தயம்


குளித்தலையில் குதிரை-மாட்டுவண்டி பந்தயம்
x

குளித்தலையில் குதிரை-மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

கரூர்

நச்சலூர்,

குளித்தலை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி குளித்தலை சுங்ககேட் பகுதியில் ரேக்ளா பந்தயம் நடந்தது. இதனை இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முதலில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதில், பெரியமாடு, சிறிய மாடு, இரட்டை மாடு என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. பின்னர் மாடுகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது.

பின்னர் குதிரை வண்டி பந்தயம் பெரிய குதிரை, சிறிய குதிரை என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து குதிரைகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது. இதையடுத்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், குதிரைகளின் உரிமையாளர்களும் பரிசுகள் வழங்கப்பட்டன. குதிரை, மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


Next Story