ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்


ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 15 March 2023 6:45 PM GMT (Updated: 15 March 2023 6:46 PM GMT)

ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

ராமநாதபுரம்

தொண்டி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவட்ட துணை செயலாளர் குருசாமி தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 20 வருடங்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்பில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஏழை எளியவர்கள் நிலம் அற்ற பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அப்போது இருந்த அதிகாரிகள் தகுதியான பயனாளிகளுக்கு பட்டா வழங்காமல் வசதி படைத்தவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி விட்டனர். அதன் பிறகு இந்த 2 தாலுகாக்களிலும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படவில்லை. எனவே முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இத்தாலுகாக்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நிலமற்ற மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story