கால்நடைகளுக்கு தோல்கட்டி நோய் பரவாமல் தடுப்பது எப்படி?


கால்நடைகளுக்கு தோல்கட்டி நோய் பரவாமல் தடுப்பது எப்படி?
x

கால்நடைகளுக்கு தோல்கட்டி நோய் பரவாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கரூர்

தோல்கட்டி நோய்

தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு தோல்கட்டி நோய் பரவாமல் தடுப்பது குறித்து கால்நடைத்துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தோகைமலையில் கால்நடைகளுக்கான தோல்கட்டி நோய் குறித்து வீடு வீடாக சென்று செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் தோல்கட்டி நோயினால் ஏற்படும் பாதிப்புகள், அதன் அறிகுறிகள், தோல்கட்டி நோய் பரவுவதற்கான காரணங்கள், தோல்கட்டி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூலிகை மருத்துவம் மூலம் குணமாக்கும் வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் எடுத்து கூறப்பட்டது.

கருச்சிதைவு

இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தற்போது கால்நடைகளுக்கு தீவிரமாக பரவி வரும் தோல்கட்டி நோய் என்பது கேப்ரிபாக்ஸ் என்ற வைரசால் பரவி வருகிறது. இதனால் சினைமாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படவும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இதில் குப்பைமேனி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை, நல்லெண்ணெய், பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக அறைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து நன்றாக ஆறவிட்டு பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தோல்கட்டி நோய் பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும். இதன் மூலம் தோல்கட்டி நோய் குணமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story