சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்


சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்
x

திருச்சி மாவட்டத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போராட்டம்

லால்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனிதசங்கிலி அறப்போராட்டம் நடத்தினர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் மரிய கமல், பொருளாளர் செம்பரை.ராஜா மாங்குடி ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய குழு நிர்வாகி குமார் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் மார்ட்டின், மணிகண்டன், காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் சுகுமார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லியோ ஸ்டான்லி, எஸ்.டி.பி.ஐ. திருச்சி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் நிறைவுரையாற்றினார்.

துறையூர்-திருவெறும்பூர்

துறையூரில் நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துறையூர் ஒன்றிய செயலாளர் மொழி சிவா தலைமை தாங்கினார். இதில் மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க.உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

மணப்பாறை, துவரங்குறிச்சி பஸ் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவெறும்பூர் கடைவீதியில் நடந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் குணா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

கல்லக்குடி-முசிறி

உப்பிலியபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம் தலைமையிலும், கல்லக்குடி பஸ் நிலையம் முன்பு மாநில விடுதலை முன்னணி துணை செயலாளர் விடுதலை இன்பன் தலைமையிலும், முசிறி கைகாட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முசிறி சட்டமன்றதொகுதி செயலாளர் கலைச்செல்வன் தலைமையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

திருச்சி நகர்

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சிவா (இந்திய கம்யூனிஸ்டு), ஜவகர்(காங்கிரஸ்), ரெக்கையன் (ம.தி.மு.க.), பைஸ்அகமது (மனிதநேய மக்கள் கட்சி), பிரபாகரன்(வி.சி.க.) சேகர்(தி.க.) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story