மனுநீதி முகாம்

மனுநீதி முகாம் நடந்தது
கடையநல்லூர:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா பண்பொழி மற்றும் மேக்கரை ஆகிய கிராமங்களுக்கு பண்பொழி சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி முகாம் நடந்தது. இதில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். வருவாய்த்துறையின் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொைக உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஷீலா, வேளாண்மை துணை இயக்குனர் தமிழ் மலர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலதி பொன்னுசாமி, செங்கோட்டை தாசில்தார் கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





