திருமணமான 6 மாதத்தில் கணவன்-மனைவி தூக்கு போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை


திருமணமான 6 மாதத்தில் கணவன்-மனைவி தூக்கு போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
x

மதுரவாயல் அருகே திருமணமான 6 மாதத்தில் கணவன்-மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை


நெல்லையை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 22). இவர் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி காயலான் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆர்த்தி(20), என்ற பெண்ணுடன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த நிலையில் இருவரும் மதுரவாயலில் வசித்து வந்தனர். இன்று காலை இவரது உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது செல்போனும் எடுக்கவில்லை கடையும் திறக்கவில்லை. வீட்டின் கதவும் நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story