ஆர்.கே.பேட்டையில் காதல் கணவன், மனைவி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை


ஆர்.கே.பேட்டையில் காதல் கணவன், மனைவி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆர்.கே.பேட்டையில் காதல் கணவன், மனைவி ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருவள்ளூர்

காதல் திருமணம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் பவித்ரா (வயது 22). இவர் ஆர்.கே. பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தி்ல் வேலை பார்த்து வந்தவர் சவுந்தரராஜன் (25). ஆர்.கே. பேட்டை அருகே கொண்டாபுரம் காலனியை சேர்ந்தவர்.

சில மாதங்களுக்கு முன் சவுந்தரராஜனும், பவித்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பவித்ரா 5 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று காலை கொண்டாபுரம் காலனியில் உள்ள சவுந்தரராஜன் வீட்டில் பவித்ராவும், சவுந்தரராஜனும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கினார்கள். இதை பார்த்த உறவினர்கள் அவர்கள் இருவரையும் சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story