வங்கி பெண் ஊழியரை தாக்கிய கணவர் கைது

வங்கி பெண் ஊழியரை தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர்
கோவை பாப்பநாயக்கன்பாளையம் அருந்ததியர் வீதி யை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி அனிதா (30). தனியார் வங்கி ஊழியர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 1-ந் தேதி அனிதா கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
அவரை தேடி காசிநாதன் சென்றா போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காசிநாதன் தனது மனைவி அனிதாவை நடுரோட்டில் வைத்து தாக்கினார்.
இது குறித்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளை கீழ் வழக்கு பதிவு செய்து காசிநாதனை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.
Next Story






