மனைவியுடன் இருந்த படுக்கை அறை காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டிய கணவர் கைது


மனைவியுடன் இருந்த படுக்கை அறை காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டிய கணவர் கைது
x

மனைவியுடன் இருந்த படுக்கை அறை காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டிய கணவர் கைது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் மொடச்சூரை சேர்ந்தவர் லிவ்விங்ஸ்டன் ஜெயபால்(வயது30). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பொம்மம்பட்டியை சேர்ந்த அபிதா (23) என்ற பெண்ணுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

லிவ்விங்ஸ்டன் ஜெயபால் தான் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்று திருமணத்தின்போது கூறியுள்ளார். அதனால் வரதட்சணையாக ரூ.1 லட்சமும், 20 பவுன் நகையும் பெண் வீட்டார் கொடுத்துள்ளார்கள்.

இந்தநிலையில் லிவ்விங்ஸ்டன் மத்திய அரசு அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. இதுபற்றி அபிதா கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது லிவ்விங்ஸ்டன் ஜெயபால், நாம் 2 பேரும் ஒன்றாக இருந்த படுக்கை அறை காட்சிகளை வீடியோ கால் மூலம் பதிவு செய்து வைத்துள்ளேன். ஏற்கனவே அதை 2 பேர் பார்த்துள்ளார்கள். என்னிடம் வேறு ஏதாவது கேள்விகள் கேட்டால் அந்த காட்சிகளை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதுபற்றி கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அபிதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிவ்விங்ஸ்டன் ஜெயபாலை கைது செய்தனர்.


Next Story