மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கணவர் பலி


மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கணவர் பலி
x

அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் கணவர் பலியானார். மனைவி படுகாயமடைந்தார்.

புதுக்கோட்டை

வாலிபர் பலி

அன்னவாசல் அருகே நார்த்தாமலை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் முருகேசன் (வயது 36). இவரது மனைவி ராசாத்தி (30). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை நார்த்தாமலையில் இருந்து அன்னவாசல் அருகே உள்ள நல்லம்மாள் சத்திரத்தில் உள்ள முருகேசன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அன்னவாசல்-கீழக்குறிச்சி சாலையில் உள்ள தைலமரக்காடு பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். ராசாத்தி படுகாயமடைந்தார்.

மனைவி படுகாயம்

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் ராசாத்தியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னவாசல் போலீசார் முருகேசன் உடலை கைப்பற்றி பிேரத பரிேசாதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story