ஜனாதிபதி வேட்பாளராக பட்டியலின பெண்ணை பா.ஜ.க அறிவித்தால் வரவேற்கிறேன் - துரை முருகன்


ஜனாதிபதி வேட்பாளராக பட்டியலின பெண்ணை பா.ஜ.க அறிவித்தால் வரவேற்கிறேன் - துரை முருகன்
x

ஜனாதிபதி வேட்பாளராக பட்டியலின பெண்ணை பா.ஜ.க அறிவித்தால் தனிப்பட்ட முறையில் வரவேற்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் விபத்துக்களைத் தடுக்க காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாததால் பலத்த காயம் மற்றும் உயிர் சேதம் ஏற்படுகிறது.இதை தடுக்கும் வண்ணம் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும் பலர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.

அதை கட்டுபடுத்தும் விதமாக வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் ,தெருக்களில் நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது ,

ஹெல்மட் அணிவது மிகவும் அவசியமானது .100 ல் 80 பேர் ஹெல்மெட் அணிவது இல்லை. பெரும்பாலானோர் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுகின்றனர்.

சென்னையில் வாகன ஓட்டிகள் அதிகளவில் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்மெட் அணியவேண்டும்.ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.

ஜனாதிபதி வேட்பாளராக பட்டியலின பெண்ணை பா.ஜ.க அறிவித்தால் தனிப்பட்ட முறையில் நான் அதை வரவேற்கிறேன். காட்பாடியில் எம்.ஜி.ஆ.ருக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார்.

குஷ்புவுக்கு கோவில் கட்டும்போது எம்.ஜி.ஆ.ரு.க்கு கோவில் கட்டுவது தவறு இல்லை.திராவிட கொள்கைகளை உண்மையிலே கடைபிடிக்கும் கட்சியாக தி.மு.க மட்டுமே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.பி கதிர் ஆனந்த்,என்,எல்,ஏ கார்த்திகேயன் ,மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார்,மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


Next Story