வனப்பகுதியில் தேன், மூலிகை சேகரிக்க அடையாள அட்டை வழங்க வேண்டும்

வனப்பகுதியில் தேன், மூலிகை சேகரிக்க அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம், இருளர் இனமக்கள் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி:
பர்கூர், போச்சம்பள்ளி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கொல்லப்பள்ளி, பூமாலை நகர், காரக்குப்பம், ஜவுக்பள்ளம், எம்.ஜி.ஆர். நகர், பழனிஆண்டவர் நகர், தந்தோசன்கொல்லை, பால்செனை, கொத்தப்பள்ளி, காளிக்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருளர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இருளர் இனமக்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் தேனி, வால்பாறை, தர்மபுரி மாவட்டங்களில் வசிக்கும் இருளர் இனமக்கள் சிறுவனத்திற்கு சென்று வர அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடையாள அட்டை இதுவரை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. எனவே எங்களுக்கு வனத்திற்குள் சென்று தேன், முலிகை சேகரிக்க அட்டையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரி உள்ளனர்.






