நகரமன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

ஆற்காடு நகரமன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
ஆற்காடு நகராட்சியில் 30 நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடையாள அட்டை வழங்கும்படி நகர மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று நகர மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர மன்ற தலைவர் அறையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாங்கி, முதல் அடையாள அட்டையை நகர மன்ற உறுப்பினர் பொன்.ராஜசேகருக்கு வழங்கினார். இதில் நகர மன்ற துணைத் தலைவர் டாக்டர். பவளக்கொடி சரவணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





