மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்


மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்
x

ராணிப்பேட்டையில்மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் 64 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. 17 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பதிவும், புதிதாக வந்த 67 மாற்று்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கான பதிவும், 61 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாற்றுத்திறனாளி அலுவலக பணியாளர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story