கடலில் குதித்து ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை


கடலில் குதித்து ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை
x

கடலில் குதித்து ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை.

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில் தனவத் கார்த்திக் (வயது 20) படித்து வந்தார். அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள ராமகிருஷ்ணா கடற்கரை பகுதியில் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்த போலீசார் விரைந்து சென்று மீனவர்களின் உதவியோடு தனவத் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் தனவத் கார்த்திக் ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டார். இதனையடுத்து அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.


Next Story