31 மாவட்டங்களில் பாதிப்பு: தமிழகத்தில் 737 பேருக்கு கொரோனா


31 மாவட்டங்களில் பாதிப்பு: தமிழகத்தில் 737 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் நேற்று 737 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 31 மாவட்டங்களில் பாதிப்பு பதிவாகியுள்ளது.

சென்னை,

நேற்று புதிதாக 16 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 397 பேரும், பெண்கள் 340 பேரும் உள்பட 737 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் 4 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 700-ஐ தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 383 பேர், செங்கல்பட்டில் 128 பேர், திருவள்ளூரில் 49 பேர் உள்பட 31 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

7 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு இல்லை. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 39 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 115 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

322 பேர் 'டிஸ்சார்ஜ்'

தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.

நேற்றைய நிலவரப்படி 4 ஆயிரத்து 366 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 103 பேரும், செங்கல்பட்டில் 851 பேரும், திருவள்ளூரில் 225 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 223 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 322 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 19 ஆயிரத்து 905 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story