சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்தது


சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்தது
x

கடந்த மாதத்தில் பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

விருதுநகர்


கடந்த மாதத்தில் பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

வணிகர்களுக்கு பாதிப்பு

இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரை 58.4 லட்சம் லிட்டராக இருந்த நிலையில் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இறக்குமதி 45.9 லட்சம் லிட்டராக இருந்தது. இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாத இறக்குமதி 10.98சதவீதம் குறைந்துள்ளது பாமாயில் இறக்குமதி மட்டும் 33 சதவீதம் குறைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பாமாயிலில் பெருமளவு சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி செய்யப்படுவதால் இங்கு சுத்திகரிக்கும் தொழிலில் ஈடுபடும் பாமாயில் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இறக்குமதி குறைவு

மேலும் கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரை சமையல் எண்ணெய் இறக்குமதி 21.74 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 24.12 லட்சம் லிட்டர் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

பாமாயில் மட்டுமல்லாமல் சோயாபீன், சூரியகாந்தி ஆகிய சமையல் எண்ணெய்யின் இறக்குமதியும் குறைந்துள்ளது. சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 3 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 66 சதவீதமும்குறைந்துள்ளது. மத்திய அரசு பாமாயில் இறக்குமதிக்கான வரியை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.


Next Story