வெவ்வேறு சம்பவத்தில்பெண் உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவத்தில்பெண் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:46 PM GMT)

போடி, உப்புக்கோட்டை பகுதியில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தேனி

போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் மனைவி சாரதா (வயது 42). இவர், உடல்நலக்குறைவால் அவதியடைந்தார். இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் பரமசிவம் வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகள் டியூசன் சென்றனர். சாரதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இதற்கிடையே டியூசன் முடிந்து குழந்தைகள் வந்தனர். அப்போது சாரதா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதைக்கண்டதும் அவர்கள் அலறியடித்து அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் சாரதாவை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், கம்பம் குரங்கு மாயன் தெருவை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (25). இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் கடந்த 1 மாதமாக இவர், உப்புக்கோட்டை அருகே உள்ள பாலார்பட்டியில் தனது நண்பர் அஜித்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீருசின்னம்மாள் கோவில் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story