அரியலூரில் இன்று 5 மையங்களில் 'நீட்' தேர்வு-1,994 பேர் எழுதுகிறார்கள்


அரியலூரில் இன்று 5 மையங்களில் நீட் தேர்வு-1,994 பேர் எழுதுகிறார்கள்
x

அரியலூரில் ‘நீட்' தேர்வு 5 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 1,994 பேர் எழுதுகின்றனர்.

அரியலூர்

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது. கடந்த கல்வி ஆண்டு வரை அரியலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு எழுத தேர்வு மையங்கள் இல்லாத நிலையில், இந்த ஆண்டு மாணவ-மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அரியலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு நடத்துவதற்கு 5 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு நடைபெறும் மையங்கள், தேர்வு எழுதம் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் பள்ளி, கல்லக்குடி டால்மியா வித்யா மந்திர் பள்ளி, தாமரைக்குளம் வித்யா மந்திர் பள்ளியில் தலா 360 மாணவ-மாணவிகளும், கீழப்பழுவூர் விநாயகா பப்ளிக் பள்ளியில் 720 மாணவ-மாணவிகளும், கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் பள்ளியில் 194 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 1,994 பேர் 'நீட்' தேர்வு எழுதவுள்ளனர். இதனால் அந்த தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு மாணவ-மாணவிகள் தேர்வு எழுத தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story