அதிபெரமனூர் பகுதியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி


அதிபெரமனூர் பகுதியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
x

அதிபெரமனூர் பகுதியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி

அதிபெரமனூர் பகுதியில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அதிபெரமனூர் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. வீடுகளில் புகுந்து உள்ளே இருக்கும் பொருட்களை எடுத்து சென்று விடுகிறது. மேலும் சிறுவர்கள் கையில் வைத்து சாப்பிடும் தின்பண்டங்களையும் பறித்து செல்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை குரங்குகளை பார்த்து பயப்படும் நிலை உள்ளது. எனவே அதிபெரமனுர் பகுதியில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story