போடியில், கல்லூரிக்கு சென்ற போதுபஸ் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி; நண்பர் படுகாயம்
![போடியில், கல்லூரிக்கு சென்ற போதுபஸ் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி; நண்பர் படுகாயம் போடியில், கல்லூரிக்கு சென்ற போதுபஸ் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி; நண்பர் படுகாயம்](https://media.dailythanthi.com/h-upload/2023/02/23/1156653-dea.gif)
போடியில் கல்லூரிக்கு சென்றபோது பஸ் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.
போடி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த முத்துகிளி மகன் லோகேஷ்வரன் (வயது 19). மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நாட்டுத்துரை (19). இவர்கள் இருவரும் போடி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நாட்டுத்துரை, லோகேஷ்வரன் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். நேற்று காலை இருவரும் மோட்டார்சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார்சைக்கிளை லோகேஷ்வரன் ஓட்டினார். தேனி-போடி சாலையில் சோலையம்பட்டி களம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த தனியார் பஸ் இவர்களது மோட்டார்சைக்கிள் மீது ேமாதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டதில் லோகேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். நாட்டுத்துரை பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் லோகேஷ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாட்டுத்துரையை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான தேனி அல்லிநகரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.