வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு சம்பவங்களில்  மின்சாரம் பாய்ந்து வியாபாரி உள்பட 2 பேர் பலி
x

வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி உள்பட 2 பேர் பலியாகினர்.

தேனி

மின்சாரம் பாய்ந்தது

உத்தமபாளையம் மாதர் சங்க தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 52). பாத்திர வியாபாரி. இன்று இவரது வீட்டில் மராமத்து பணி நடந்தது. அப்போது வீட்டின் மாடிக்கு படிக்கட்டு வழியாக ஏறினார். அப்போது படிக்கட்டில் இருந்து கால் தவறி அருகே சென்ற மின்வயர் மீது விழுந்தார்.

இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் பலி

இதேபோல் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை அரண்மனை தெருவை சேர்ந்தவர் விஜய ரகுநாத் (21). நேற்று இவர், அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளமான பகுதியில் இருந்து சாலையில் ஏறுவதற்காக அங்கு இருந்த மின்கம்பத்தின் இழுவை கம்பியை பிடித்தார். இதில் எதிர்பாராதவிதமான அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த விஜய ரகுநாத்துக்கு, சிந்து என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story