வெவ்வேறு சம்பவங்களில்பெண் உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில்பெண் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 12 Feb 2023 6:45 PM GMT)

வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திண்டுக்கல்


வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு ஏ.கே.பி. நகரை சேர்ந்த மருதம்மாள் மகன் யுகேந்திரன் (வயது 28) கூலித்தொழிலாளி. மருதம்மாள் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். யுகேந்திரன் மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் மாலை மருதம்மாள் திரும்பி வந்தபோது வீட்டில் யுகேந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மருதம்மாள் எரியோடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் யுகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யுகேந்திரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை அருகே உள்ள புத்தூர் பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பால்காளை. இவரது மனைவி தங்கம்மாள் (23). கடந்த சில ஆண்டுகளாக இவர், வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாவில்லை. இதனால் மனமுடைந்த தங்கம்மாள் கடந்த 10-ந்தேதி தோட்டத்தில் இருந்த கண்வலிக்கிழங்கை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story