ஈரோடு மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில்  மேலும் 35 பேருக்கு கொரோனா
x

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு

சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 551 ஆக உயர்ந்தது.

நேற்று 47 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 530 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 287 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 734 பேர் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


Related Tags :
Next Story