ஈரோடு மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில்  மேலும் 8 பேருக்கு கொரோனா
x

8 பேருக்கு கொரோனா

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 325 பேருக்கு பரிசோதனை செய்ததில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 764 ஆக உயர்ந்தது. நேற்று 5 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 985 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Related Tags :
Next Story