ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது


ஈரோடு மாவட்டத்தில்  1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்  நாளை நடக்கிறது
x

கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு

கொரோனா தொற்றின் 4-வது அலையை தடுக்கும் வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, நகர்ப்புற, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் என 1,597 மையங்களில் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட உள்ளது. இந்த முகாமில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியில், மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 196 பணியாளர்கள், 70 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.


Next Story