கயத்தாறு பேரூராட்சி பகுதியில்புதிய சுகாதார வளாகம் திறப்பு விழா


கயத்தாறு பேரூராட்சி பகுதியில்புதிய சுகாதார வளாகம் திறப்பு விழா
x
தினத்தந்தி 1 Aug 2023 6:45 PM GMT (Updated: 1 Aug 2023 6:47 PM GMT)

கயத்தாறு பேரூராட்சி பகுதியில் புதிய சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு பேரூராட்சி 9-வது வார்டு வாரச் சந்தை வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பெண்கள், ஆண்களுக்கு புதிய சுகாதார வளாகம் குடிநீர் வசதியுடன் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதனை பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story