கோபி பகுதியில் பலத்த காற்றுடன் மழை

கோபி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
கடத்தூர்
கோபியில் கடந்த சில தினங்களாகவே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதேபோல் நேற்றும் பகலில் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணிநேரத்துக்கு மேல் மழை தொடர்ந்து பெய்தது.
இதேபோல் நல்லகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம், கரட்டூர், நாயக்கன்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சுமார் ½ மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின்தடையை சரிசெய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





