கோபியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


கோபியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

கோபியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்

ஈரோடு

கோபி போலீசார் மொடச்சூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தைக்கடை அருகே 2 பேர் உட்கார்ந்து கொண்டு ஆன்லைன் லாட்டரி எண்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டனர். உடனே அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர்கள் கோபி கரட்டூரை சேர்ந்த சிவப்பிரகாஷ் (வயது 21), நிகாந்த் (25),' என தொியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story