கோவில்பட்டியில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா


கோவில்பட்டியில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:46 PM GMT)

கோவில்பட்டியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி(கிழக்கு):

தமிழ்நாடு காமராஜர் பேரவை சார்பில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கோவில்பட்டியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் ரத்தினராஜா தலைமை தாங்கினார். காளிராஜ், அருண்குமார், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், தமிழ்நாடு காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில் குமார் ஆகியோர் இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்வாகி முனைவர். ஆ சம்பத்குமார், சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் பாஸ்கரன், பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை காளிதாஸ், நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்துமேரி, தி.மு.க. சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், பாண்டியனார் மக்கள் இயக்கம் சீனிராஜ், தமிழ்நாடு காமராஜர் பேரவை உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, ஏரல் ஒன்றிய பா.ஜ.க. சார்பாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமையில் காந்தி சிலை முன்பு கொண்டாடப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், அமைப்பு சாரா மக்கள் நலப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் முத்துமாலை மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story