குமுளியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது


குமுளியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x
தினத்தந்தி 3 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 11:56 AM GMT)

குமுளியில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

லோயர்கேம்ப்,

லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையில் போலீசார் தமிழக எல்லை குமுளி பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து பையை சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 144 லாட்டரி சீட்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு கரடிகுழி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பதும், லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story