மணலூர்பேட்டையில் கஞ்சா, சாராயம் விற்ற 2 பேர் கைது


மணலூர்பேட்டையில்  கஞ்சா, சாராயம் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2022 6:45 PM GMT (Updated: 2 Oct 2022 6:45 PM GMT)

மணலூர்பேட்டையில் கஞ்சா, சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

மணலூர்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் மணலூர்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணலூா்பேட்டை விநாயகர் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மணலூர்பேட்டை பெரியாயி கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் அறிவழகன் (வயது 22), அதே தெருவை சேர்ந்த சலவை தொழிலாளி ஏழுமலை(57) என்பதும், கஞ்சா மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அறிவழகன், ஏழுமலை ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story